ஐரோப்பா

உக்ரைன் போர்க்களத்துக்கே திரும்பிய வாக்னர் குழு … மகிழ்ச்சியில் ரஷ்யர்கள்

ரஷ்யாவில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் வெளியேறியதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உக்ரைன் போரில் தங்கள் வீரர்கள் 2000 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய அந்நாட்டு கூலிப்படையான வாக்னர் குழு, ரோஸ்டாவ் நகரை கைப்பற்றியது.

இதனால் போர் பதற்றம் உருவானதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், பெலாரஸ் அதிபர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, மீண்டும் உக்ரைன் போர்க்களத்துக்கே திரும்ப ஒப்புக் கொண்ட வாக்னர் குழு ஆயுதங்களுடன் ரஷ்யாவில் இருந்து வெளியேறியது.

அப்போது கார் ஹார்ன்களை ஒலித்து ஆரவாரம் செய்த மக்கள் உற்சாகத்துடன் அவர்களை அனுப்பி வைத்தனர்

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!