உலகம் செய்தி

வெனிசுலா கடற்பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

வெனிசுலா கடற்பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை அமெரிக்க படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வெனிசுலா கடற்கரையில் ஒரு பெரிய டேங்கரை கைப்பற்றியுள்ளதாகவும், உண்மையில் ஒரு நல்ல காரணத்திற்காக இது கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கடலோர காவல்படையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கைக்கு அமெரிக்க துருப்புக்கள் உதவியதாக மற்றுமொரு அதிகாரி கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக வெனிசுலா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கு உள்ளான மதுரோ மீது அழுத்தத்தை அதிகரிக்க ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுத்துள்ள சமீபத்திய முயற்சியாக இது கருதப்படுகிறது.

அமெரிக்கா பல தசாப்தங்களில் இப்பகுதியில் மிகப்பெரிய இராணுவ இருப்பை உருவாக்கியுள்ளது மற்றும் கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களையும் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கிடையே இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெனிசுலா அரசாங்கம் ஒரு அறிக்கையில் இந்த பறிமுதல் “ஒரு அப்பட்டமான திருட்டு மற்றும் சர்வதேச கடற்கொள்ளையர் செயலாகும்” என்று கூறியுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!