மத்திய கிழக்கு

ஏமனில் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி விடுவிப்பு

வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்பு துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 4 அதிகாரிகளும் கடத்தப்பட்டனர்.

கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பெற்றது. இதுகுறித்து வீடியோ ஒன்றும் வெளியிட்டு மீட்பு தொகையாக ரூ.248 கோடி கேட்டது. இந்தநிலையில் பயங்கரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட அதிகாரிகளை மீட்கும் பணியில் ஐ.நா. இறங்கியது.

தூதர்களை நேரில் அனுப்பி பேச்சுவார்த்தை மேற்கொண்டது. தோல்வியில் முடிந்தநிலையில் சுபியுல் அனமை மீட்க வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படி கிட்டத்தட்ட 1½ ஆண்டுகளுக்கு பின்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகள் உடல்நலனை காரணம் காட்டி சுபியுல் அனமை விடுவித்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உடல்நல பரிசோதனை மேற்கொள்ளும் அவர் விரைவில் கனடாவில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்க உள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.