இலங்கை

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – கடவுசீட்டு பெற கொழும்பு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி

அனுராதபுரம் -தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உம்ரா செல்வதற்காக கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) செய்வதற்காக கொழும்புக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் வழியில் நேற்றிரவு (03) 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்தில் அனுராதபுரம் -கஹடகஸ்திகிலிய பகுதியில் வசித்து வரும் அப்துல் ஹக் மௌலானா, அவரது மனைவி பாத்திமா வபா, தங்கையான பாத்திமா ஆபிதா, மற்றும் சாரதி நசீம் ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வேனில் பயணித்த ஆறு வயது எட்டு வயது 11 வயது சிறுவர்கள் காயம் அடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேகமாக வந்து வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் விசாரணைகளின் பின்னர் உறவினர்களின் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்