ஐரோப்பா

இங்கிலாந்தில் புகலிடம் பெற்ற வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) டென்மார்கை தழுவிய குடியேற்ற சீர்த்திருத்தங்களை வரும் திங்கட்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறிது.

புதிய சீர்த்திருத்தங்களுக்கு அமைய இங்கிலாந்தில் புகலிடம் பெற்ற மக்கள், தங்கள் நாடு பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டால் மீளவும் அந்நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய இங்கிலாந்து விதிகளின் கீழ், அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிரித்தானியாவில் தங்கியுள்ளனர். பின்னர் காலவரையற்ற விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் குடியுரிமை பெறும் பாதையில் செல்லலாம்.

இதனை மாற்றும் வகையிலேயே புதிய விதிகள் கொண்டுவரப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood), ஆபத்தில் இருந்து தப்பி ஓடும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடாக நாங்கள் எப்போதும் இருப்போம், ஆனால் நாம் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

“ருவாண்டா திட்டத்தில் நேரமும் பணமும் ‘வீணடிக்கப்பட்டது. ஐரோப்பா முழுவதும் புகலிடக் கோரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், பிரிட்டனில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 2 times, 3 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!