நாட்டிற்கு சுதந்திர நேரம் வந்துவிட்டது – வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
அமெரிக்கப்(America) படைகளால் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ(Nicolas Maduro) கைது செய்யப்பட்ட பிறகு, வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado) தனது நாட்டிற்கு சுதந்திர நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 2024ல் மதுரோ சர்ச்சைக்குரிய மறுதேர்தலுக்குப் பிறகு தலைமறைவாக இருக்கும் நோபல் அமைதிப் பரிசு பெற்ற மச்சாடோ, எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முண்டோ கோன்சலஸ் உருட்டியா(Edmundo González Urrutia) ஜனாதிபதியாக உடனடியாக தனது அரசியலமைப்பு ஆணையை ஏற்க வேண்டும் என்று Xல் பதிவிட்டுள்ளார்.
2024 தேர்தல்களில், தேசிய தேர்தல் கவுன்சிலால் மதுரோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், இது சைபர் தாக்குதல் காரணமாக வாக்குச் சாவடிகளில் இருந்து சரியான எண்ணிக்கையை வெளியிடவில்லை.
இந்த சைபர் தாக்குதலை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தேர்தல் மோசடியை கண்டித்து இதில் முறையான வெற்றியாளர் எட்முண்டோ கோன்சலஸ் உருட்டியா என வாதிட்டனர்.
மச்சாடோ கடைசியாக கடந்த மாதம் பொதுவில் காணப்பட்டார், அவர் 11 மாத தலைமறைவிலிருந்து மீண்டு நோர்வேக்குச்(Norway) சென்றார், அங்கு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.





