இலங்கை

யாழில் பாடசாலை மாணவியுடன் ஆபாசமாக பேசிய ஆசிரியர் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியான சிறுமியுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புறநகர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரே, யாழ்ப்பாண பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

இன்று காலை 6 மணியளவில் ஆசிரியர் தொலைபேசியில் ஆபாசமாக பேசியதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.பெற்றோரின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்திய ஆசிரியர், மாணவிக்கு தொலைபேசியில் கணிதம் கற்பிக்கப் போவதாகவும் அவரிடம் தொலைபேசியை கொடுக்குமாறும் குறிப்பிட்டதாக பெற்றோரின் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

மாணவியிடம் தொலைபேசியை கொடுத்த பின்னர் அவுட் ஸ்பீக்கரை நிறுத்தும்படி கூறியதாகவும் பின்னர் மாணவியை சில பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும்படி அறிவுறுத்தல்கள் வழங்கியதாகவும் பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறிப்பிட்ட ஆசிரியர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.விசாரணையின் பின்னரே முறைப்பாட்டின் உண்மைத்தன்மை தெரிய வருமென பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்