விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு 267 ஓட்டங்கள் இலக்கு

ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான துவக்கத்தையே கொடுத்து. அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்களை மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். இவருடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் சட்டென சரிந்த நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பான்டியா ஜோடி விக்கெட் விழுவதை தடுத்து நிறுத்தி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

இஷான் கிஷன் 81 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஹர்திக் பான்டியா 87 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி ஸ்கோர் வேகமாக அதிகரித்தது.

இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 266 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இவர் தவிர அந்த அணியின் ஹாரிஸ் ரவுப் மூன்று விக்கெட்களையும், நசீம் ஷா மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். பாகிஸ்தான் அணி 267 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ