செய்தி

இஸ்ரேலுக்கு அமெரிக்கா விதித்த கடுமையான நிபந்தனை

இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து தொடர்ந்து ஆதரவைப் பெற காஸாவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை இஸ்ரேல் தடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இஸ்ரேல் புதிய, உடனடி நடவடிக்கைகள் எடுப்பதைப் பொறுத்தே அந்நாட்டுக்கான அமெரிக்காவின் வருங்காலக் கொள்கை அமையும் என பைடன் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 துயர்துடைப்பு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதன் பிறகு பைடன் முதன்முறையாக நெட்டன்யாஹுவுடன் (Netanyahu) தொலைபேசியில் உரையாற்றியுள்ளார்.

காஸாவுக்குப் பெருமளவு நிவாரணப் பொருள்களை அனுமதிக்கவும் உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லக் கூடுதல் பாதைகளைத் திறக்கவும் வாஷிங்டன் வலியுறுத்தியது.

பிணையாளிகளை மீட்டு வருவதற்கான உடன்பாடு குறித்து முடிவெடுக்க நெட்டன்யாஹு தமது பேராளர் குழுவுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என பைடன் கூறுகிறார்.

விரைவில் மாற்றங்களை எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இஸ்ரேலிடம் எந்த மாற்றமும் இல்லையென்றால் வாஷிங்டனின் கொள்கையில் மாற்றம் இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கூறினார்.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி