இலங்கை செய்தி

கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கத்துறை

வரலாறு காணாதவகையில் இலங்கை சுங்கத்துறை அதிக வருமானத்தினை கடந்த ஆண்டு ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 970 பில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின் வரலாற்றில் ஈட்டபட்ட அதிக வருமானமாக பதிவாகியிருந்தது.

நிதியமைச்சு, கடந்த வருடத்துக்கான வருமான இலக்காக ஆயிரத்து 217 பில்லியன் ரூபாயை இலங்கை சுங்கத்துக்கு நிர்ணயித்திருந்தது.

எவ்வாறாயினும், இறக்குமதி கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அந்த இலக்கை 893 பில்லியன் ரூபாயாக திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content