இலங்கை செய்தி

தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து வீட்டில் இருந்து போன மகன் இதுவரை வீடு திரும்பவில்லை

பலாங்கொட சமனலவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதான ஒருவர் கடந்த 3ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து மகன் ஓடிவிட்டதாக காணாமல் போனவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

அப்படி வீட்டை விட்டு வெளியேறிய அவர் இன்று வரை வீடு திரும்பவில்லை.

இது தொடர்பில் அவரது நண்பர்கள் பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்களை பயன்படுத்தி காணாமல் போனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இதுவரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருந்த குழந்தை ஒன்றும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பலாங்கொடை சமனலவத்தை பிரதேசத்தில் காணாமல் போனதாகவும், அந்த குழந்தையை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!