இலங்கை

இலங்கையில் காதலியிடம் இருந்து மகனை மீட்க தந்தை செய்த அதிர்ச்சி செயல்

இலங்கையில் காதலியிடம் இருந்து மகனை மீட்டுத் தருமாறு கோரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த நபர் நேற்று முன்தினம் பிற்பகல் கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 5000 ரூபாய் பணத்தினை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் மகன், கலேவெல பிரதேசத்தில் உள்ள காதலியின் வீட்டில் உள்ள நிலையில் னது மகனை மீட்டு தம்மிடம் ஒப்படைக்குமாறு கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் விபுல பண்டாரவிடம் கோரியுள்ளார்.

பின்னர் கலேவெல பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாடுகள் பிரிவின் ​பொறுப்பதிகாரியை அழைத்து முறைப்பாட்டைப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.

அப்போது, ​​பொறுப்பதிகாரி பொலிஸ் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த போது, ​​சந்தேக நபர், வாசித்து கொண்டிருந்த புத்தகத்தில் அட்டை ஒன்றை வைத்துள்ளார்.

பின்னர் அதனை திறந்து பார்த்த போது 5000 ரூபா நாணயத்தாள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த பொறுப்பதிகாரி அந்த நபரிடம் இந்த பணம் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னர் அவர் தனது தேவையை பூர்த்தி செய்ய மகிழ்ச்சியான தொகையாக கொடுக்க முயன்றதாக கூறினார். அப்போது, ​​கலேவெல பொலிஸ் பொறுப்பதிகாரி, குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை அழைத்து, கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் இலஞ்சம் கொடுக்க முயன்றமை தொடர்பில் சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content