ஐரோப்பா

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவன்

பிரான்ஸில் பாடசாலை மாணவன் ஒருவன் தனது பாடசாலைக்கு கொக்கைன் போதைப்பொருளை எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

பாடசாலை இடைவேளை நேரத்தின் போது குறித்த மாணவன் தனது புத்தகப்பையில் இருந்து குறித்த கொக்கைன் போதைப்பொருள் பொதியை வெளியே எடுத்துள்ளார்.

இதனைக் கண்காணித்த ஆசிரியர், உடனடியாக அதனை பறித்து எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர் பொலிஸாருக்கு அழைத்துள்ளார்.

குறித்த பொருள் என்னவென தெரியாத குறித்த மாணவன், அதனைத் தமது வீட்டின் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றின் கீழே இருந்து கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

பொலிஸார் உடனடியாக குறித்த மாணவனின் வீட்டுக்குச் சென்று அங்கு சோதனை நடத்தினர். ஆனால் அங்கிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை.

குறித்த மாணவனின் பெற்றோர்களை பொலிஸார் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!