ஐரோப்பா

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலால் தடைப்படும் ருவாண்டா திட்டம்!

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னர் புகலிடக் கோரிக்கையாளர்களை தாங்கிய விமானம் ருவாண்டாவிற்கு செல்லாது என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் முதல் விமானங்கள் செல்லும் என்று அவர் முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நடைமுறை சாத்தியத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்படி ஜுலை 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் ருவாண்டா திட்டம் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சர் கெய்ர் ஸ்டார்மர், ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் விமானங்கள் தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் புறப்படாது எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியீட்டியது. இது பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தொழிற்கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 20 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்