தென் அமெரிக்கா

பிரேசிலை புரட்டி போட்ட மழை வெள்ளம் ; பலியானோர் எண்ணி்கை 107 ஆக உயர்வு

தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே சுல் மாநில தலைநகர் போர்டோ அலெக்ரே உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டிவருகிறது.

இதனால் அந்த நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறிவிட்டன. பாலங்கள்,ரோடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 107- ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 134 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

படகு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் தெற்கு பிரேசில் பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த
error: Content is protected !!