இலங்கை

தடை உத்தரவை மீறி இலுப்பைகுளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

திருகோணமலை-இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டு இலுப்பைக்குளம், பெரியகுள சந்திக்கு அண்மையில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகின்ற விகாரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”

“பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”,

“தொல்லியல் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டுமா?”,

“தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே”

போன்ற வாசகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் முகமாக திருகோணமலை – நிலாவெளி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவு விண்ணப்பத்தின் அடிப்படையில் திருகோணமலை நீதவான் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு 14 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்