இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது – ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை காலநிலை மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “பொருளாதாரத்தை மீட்பதே ஜனாதிபதி என்ற எனது பணி. அதாவது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது. அந்த பாத்திரம் தற்போது முடிவுக்கு வருகிறது. இனி அடுத்த கட்ட நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த பொருளாதார மாதிரியை தொடர முடியாது.  நிச்சயமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேவைப்படுகிறது. அதில் ஒன்று காற்றாலை ஆற்றல்.

அந்த மாகாணத்தில் உள்ள வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் அந்த ஆற்றலை உருவாக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஹம்பாந்தோட்டை சூரிய சக்தி பற்றிய பரபரப்பு இப்போதுதான் ஆரம்பித்துள்ளது.

நாம் செல்ல வேண்டிய தூரம் வெகுதூரம் இருந்தாலும், இந்தியப் பிரதமர் மோடியுடன் நான் வெளியிட்ட தொலைநோக்கு அறிக்கையின்படி, இந்தியாவுக்கு எரிசக்தி விற்பனை செய்வதையும் இலங்கை உள்ளடக்கியுள்ளது.

இப்போது அதற்கான கிரிட் இணைப்பை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளோம். அதானி குழுமத்துடனான முதல் ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!