இலங்கை

12 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!

காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலையின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் தனது வீட்டில் மேலதிக வகுப்புகளை நடத்தியதாகவும், அந்த வகுப்பிற்கு சமூகமளித்த மாணவி ஒருவரே மேற்படி துஷ்பிரயோக சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வகுப்பு முடிந்து ஏனைய மாணவர்கள் வெளியேறிச் சென்ற நிலையில், குறித்த மாணவி தனது சகோதரிக்காக காந்திருந்த சமையத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதியம் 12.30 மணியளவில் வகுப்பு முடிந்ததும் தன்னை அறைக்கு அழைத்துச் சென்று தேநீர் அருந்த கொடுத்து உபசரித்து துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த அதிபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!