ஐரோப்பா

பெல்ஜியம் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து பதவியை ராஜினாமா செய்த பிரதமர்

பெல்ஜியம் நாட்டின் பிரதமராக இருந்தவர் அலெக்சாண்டர் டி குரூ. 48 வயதான இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் அவர் கூறும் போது, “தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன். இது நான் எதிர்பாராத முடிவு. எனவே இதற்கு நானே பொறுப்பேற்கிறேன்.

இன்று முதல் நான் எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன். நடப்பு விவகாரங்களில் நான் இனி கவனம் செலுத்துவேன்” என்று தெரிவித்தார். அவர் ராஜினாமா முடிவை அறிவிக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!