இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 அல்லது 28ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் 16 முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் ஜனாதிபதித் தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை கருத்தில் கொண்டு அது தீர்மானிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை இந்த வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக அதன் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேட்புமனுக்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்படும்.

பின்னர் ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 28 முதல் 42 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.

நிச்சயமாக சனிக்கிழமையன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், அதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் அது தொடர்பான தபால் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை உரிய நேரத்தில் நடத்துமாறு கோரி, பிரஜைகள் கூட்டமைப்பினர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பிரதிநிதிகள் சிலர் ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!