இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் – வஜிர

ஜனாதிபதித் தேர்தலை ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திரு வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் அறிக்கையை வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்ட திகதியில் அவருக்கு அறிவிக்கப்படும் எனவும் வஜிர அபேவர்தன இங்கு தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒக்டோபர் 17ஆம் திகதி கடைசி நாள் எனவும் எனவே தேர்தல் ஆணையாளருக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கினால் ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த  முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!