இலங்கை

இலங்கையில் பாடசாலை கட்டிடத்திற்கு தீவைத்த விஷமிகள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!

மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி பல்நோக்கு கட்டிடம் தீக்கிரையாகியுள்ளது.

நேற்று (15ம் திகதி) பிற்பகல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கட்டடம் தீப்பற்றி எரிவதைக் கண்டு அலறி துடித்ததையடுத்து, பிரதேசவாசிகளும் மாலிம்பட பொலிஸாரும் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

ஆனால் அதற்குள் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளி வளாகத்தில் இருந்த நாய் ஒன்றும் தீயில் சிக்கி இறந்தது.

இக்கட்டடத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்கள், 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மெத்தைகள், பாடசாலை மேசைகள், நாற்காலிகள், மின் உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று (16) பிற்பகல் வந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் பிரகாரம், கட்டிடத்திற்கு ஏதோ ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கட்டடத்தில் பாடசாலையின் 5 வகுப்புகள் உள்ள நிலையில் தற்போது பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதில் பாடசாலை அதிகாரிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இப்பாடசாலையின் மூன்று மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி ஓராண்டுக்கு முன்னர் மண்சரிவு ஏற்பட்டதால் பிள்ளைகளின் கல்வியில் இடையூறுகள் ஏற்பட்டன.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்