புறப்பட்ட 03 நிமிடத்தில் தரையிறக்கப்பட்ட விமானம் : விமானிக்கு நேர்ந்த துயரம்!

அயர்லாந்தில் உள்ள டப்ளின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மூன்றே நிமிடங்களில் விமானி இருக்கையில் இருந்து வெளியேறியதால் அவசர சிலை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான விபத்து விசாரணைப் பிரிவின் புதிய அறிக்கை, டப்ளினில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானம், சிறிது நேரத்திற்குப் பிறகு விமான நிலையத்திற்கு அவசரமாகத் திரும்பியதாக தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தின் முதல் விமானி இயலாமை காரணமாக சரிந்து விழுந்த நிலையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் 10,000 அடி உயரத்தை எட்டிய மூன்று நிமிடங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 23 times, 1 visits today)