இலங்கை

மக்களை வீதிக்க இறக்க திட்டம் : பின்னணில் செயற்படவுள்ள ஊடகங்கள்!

மின்சாரம் மற்றும் நீர் பிரச்சினையை பிரதான பிரச்சினையாகக் கொண்டு மக்களை வீதிக்கு இறங்க வைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த போராட்டத்திற்கு இரண்டு ஊடக நிறுவனங்கள் உதவிசெய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களைத் தூண்டிவிட்டு வீதிக்குக் கொண்டுவரும் வகையில் ஊடக நிறுவனங்கள் செயற்படுமாயின் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாம் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீர்த்தேக்கப் பகுதிகளில் மழை பெய்யாவிடின் மாற்று வழி என்ன என்பதை ஊடக நண்பர்களிடம் கூறுமாறு கேட்டுக் கொள்வதாக  தெரிவித்த அவர், இதற்கு முன்னரும் பயிர்கள் நாசமாகி மக்கள் வாழ்வதற்கு சிரமமான காலங்கள் இருந்ததாகவும் சில ஊடகங்கள் தலையிட்டதாகவும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!