இலங்கை

காலிமுகத்திடலில் தங்கியுள்ள யாசகர்களின் பரிதாபமான நிலை

கொழும்பு காலிமுகத்திடலில் தங்கியுள்ள யாசகர்களை அழைத்துச் சென்று ஹம்பாந்தோட்டை – ரிதியகமவில் அமைந்துள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

காலிமுகத்திடலில் யாசகர்களால் ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக துறைமுக அதிகாரசபை மற்றும் பொலிஸார் இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

காலி முகத்திடலில் யாசகம் பெறும் சுமார் 150 பேர் கொண்ட யாசகர்கள் குழுவினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த யாசகர்கள் ரிதியகம மையத்தில் தங்கியிருக்கும் போது அவர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகள், உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கான நிதியுதவியை இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களன் ஊடாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!