மில்டன் சூறாவளியில் இருந்து தப்பிக்க படகில் ஏறி பயணித்தவர்கள் மாயம்!
மில்டன் சூறாவளியைத் தவிர்க்கும் முயற்சியில் படகில் சென்று காணாமல் போன இருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரியாஸ் கேப்ரியல் கிர்ச்பெர்கர் மற்றும் கென்னத் தாமஸ் ரூட்செல் ஆகியோர் செவ்வாயன்று சார்லோட் துறைமுகத்தில் இருந்து தம்பாவிற்கு வடக்கே 25 மைல் தொலைவில் உள்ள டார்பன் ஸ்பிரிங்ஸுக்குச் சென்றதாக அமெரிக்க கடலோர காவல்படை கூறியது.
படகு ஹெல்டன்பெர்க் அல்லது ராணி மிலானியா என்று அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் USCG இன் செயின்ட் பீட் செக்டரைத் தொடர்பு கொள்ளுமாறு தகவல் தெரிந்தவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.





