இலங்கை

போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் குச்சவெளி பிரதேச மக்கள்

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தை பகுதியில் உள்ள மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

தமது கிராமத்திலிருந்து நோயாளர்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்வதற்கு 1500 ரூபாய் பணம் கொடுத்தும் சாரதிகள் உரிய நேரத்துக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இக்கிரமத்தில் அதிகளவிலான வயோதிபர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை கிளினிக் செல்ல வேண்டியுள்ளதாகவும் செல்வதற்கு போக்குவரத்து இல்லாமையினால் அவதிப்பட்டு வருவதாகவும் அக்கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அரசாங்கத்தினால் அரச பஸ் சேவையினை ஆரம்பிக்குமாரு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் தேர்தல் காலங்களில் மாத்திரம் பாஸ் தமது கிராமத்துக்குள் வந்து செல்வதாகவும் தெரிவித்தனர்.

ஆகவே கள்ளம்பத்தை மக்களின் நலன் கருதி அரச பஸ் சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content