இலங்கை

கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சின்தக சுரவீர தெரிவித்தார்.

கன்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதினால் பத்து வான் கதவுகளையும் இன்று (09.01) ஒரு அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் வெருகல் பிரதேசத்தில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு ட்பட்ட மாஞ்சோலைச்சேனை, மாஞ்சோலை மற்றும் அண்ணன் நகர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி தெரிவித்தார்.

அத்துடன் மொரவெவ -பேரமடுவ குளங்கள் நிரம்பி வழிவதாகவும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட நீர் பாசன திணைக்கள பணிப்பாளர் கே. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!