இலங்கைக்கு டிசம்பர் மாதம் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!
இந்த டிசம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த 4 வருடங்களில், ஒரு மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த டிசம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கு இருந்தது, இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)





