இலங்கை

கடன் மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்த நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் 4, 979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாய்  வரை கடன் பெறுவதற்கான வரம்பை அதிகரிக்க பாராளுமன்ற அரச நிதிக் குழு அனுமதி வழங்கியதாக அரச நிதிக் குழுவின் பதில் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதன்படி 9,000 பில்லியன் ரூபா கடன் வரம்பானது கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் என்றும் புதிதாக கடன் வாங்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்து நிதி அமைச்சினால் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாக பதில் தலைவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!