இந்தியா

கர்நாடகாவில் அடுத்த அதிர்ச்சி… கால்வாயில் நிர்வாணமாக மிதந்த பெண்ணின் உடல்!

மாண்டியா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை தீபிகா படுகொலை செய்யப்பட்டு அந்த சுவடு மறையும் முன் அதே பகுதியில் கால்வாயில் நிர்வாணமாக பெண் உடல் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் மாணிக்யன ஹள்ளியைச் சேர்ந்தவர் தீபிகா(28). ரீல்ஸ் மூலம் கர்நாடகா முழுவதும் பரவலாக அறிமுகமானவர். இவரது கணவர் லோகேஷ். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக தீபிகா பணியாற்றி வந்தார். கடந்த 20-ம் திகதி பள்ளிக்கு டூவீலரில் சென்ற தீபிகா அதன் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் லோகேஷ் புகார் செய்தார்.

இந்த நிலையில், இப்புகார் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீபிகாவைத் தேடி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன தீபிகாவின் வாகனம், மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ள மலையடிவாரத்தில் நிற்பதை பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த வண்டி எண்ணை வைத்து அது காணாமல் போன தீபிகாவினுடையது என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது குடும்பத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீபிகாவைத் தேடும் பணி தொடர்ந்தது. இந்த நிலையில், மலையில் கொலை செய்து புதைக்கப்பட்ட தீபிகாவின் உடலை போலீஸார் மீட்டனர்.

நித்தேஷ் கவுடா, தீபிகா

தீபிகாவுடன் கடந்த 2 ஆண்டுகளாக பழகிய நித்தேஷ் கவுடா(22) என்ற வாலிபர் தான் இந்த கொலையை செய்தார் என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக தீபிகாவின் கணவர் லோகேஷ் புகார் செய்தார். அக்கா என்று பழகிய நித்தேஷ் அதன் பின் காணாமல் போனார்.இந்த நிலையில், ஹோஸ்பெட்டில் பதுங்கியிருந்த நித்தேஷ் கவுடாவை பொலிஸா நேற்று கைது செய்தனர். தன்னுடன் பழகிய தீபிகா, விலகிச் செல்வதைத் தாங்க முடியாமல் இந்த கொலை செய்து புதைத்ததாக செய்ததாக நித்தேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொலையின் சுவடு மறைவதற்கு மாண்டியாவில் உள்ள கல்லஹள்ளியில் உள்ள கல்வெர்ட்டில் உள்ள கால்வாயில் நிர்வாண நிலையில் பெண்ணின் உடல் இன்று மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சென்ட்ரல் போலீஸார், அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அப்போது, அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த சம்பவம் குறித்து சென்ட்ரல் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாண்டியா மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 இளம்பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content