ஐரோப்பா

வாக்குவாதம் முற்றியதில் மகளை கடித்து வைத்த தாய் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

சுவிட்சர்லாந்தில், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என மகள் அடம்பிடித்ததால் ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்தில் வசிக்கும் ஒரு 19 வயது இளம்பெண், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அடம்பிடிக்க, அவருக்கும் அவரது தாய்க்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது.

தாயைத் தள்ளிவிட்டு மகள் வெளியேற முயல, கடுங்கோபமடைந்த அந்தத் தாய், மகளுடைய கையைப் பிடித்து பலமாகக் கடித்துள்ளார்.

அந்த இளம்பெண் அணிந்திருந்த ஜாக்கெட், சட்டையைத் தாண்டி அவளது கையில் காயம் ஏற்பட, பொலிஸில் புகாரளித்துள்ளார் அவர்.

அந்தத் தாய் மகளைத் தாக்கியதாக முடிவு செய்துள்ள நீதிமன்றம், அவர் பெரும் தொகை ஒன்றை அபராதமாக செலுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!