இலங்கை

உணவு ஊட்டும் போது தாய்க்கு சுகயீனம்; குழந்தை மரணம்

குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த போது 26 வயதான தாய்க்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, தொண்டையில் உணவு சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பொகவந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகன் அகல்யா என்ற ஒரு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவூட்டிக் கொண்டிருந்த போது தாய்க்கு வலிப்பு ஏற்பட்டதுடன் குழந்தைக்கு தொண்டையில் உண்ட உணவு சிக்கியுள்ளது. அதையடுத்து தாயும் குழந்தையும் கட்டிப்பிடித்த படி தரையில் கிடந்ததை கண்ட அயலவர்கள் விரைந்து இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இருந்தபோதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!