இலங்கை

மன்னாரில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(7) காலை 11 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் போது கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,

ஐ.நா.சபையின் 53 வது கூட்டத்தொடர் இடம் பெற்று வருகிறது.எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு போராட்டங்களை முன்னெடுக்க முடியாது.
ஐ.நா சபையை நங்கள் இவ்வளவு காலமும் நம்பி வந்தோம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று.ஆனால் அந்த நீதியும் தாமதமாகிறது.இந்த அமர்விலையாவது எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இந்த போராட்டத்தை வீதிகளில் நின்று முன்னெடுத்து வருகிறோம்.

ஆனால் எமக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.நாங்கள் உயிருடன் இருக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் தொடரும்.தற்போது மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றது.தற்போது முல்லைத்தீவிலும் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் அதிக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்க முடியும்.

மேலும் அவர் பிடித்து சென்ற பிள்ளைகள் இல்லை என்றால் அவர்கள் தான் கொலை செய்து புதைத்திருக்க வேண்டும்.அவர்களை இராணுவ முகாம்களில் புதைக்கின்ற மையினால் தான் அவர்கள் காணிகளை விடுவிக்கின்றார்கள் இல்லை.அதனாலேயே சிங்கள மக்களை குடி யேற்றவும்,புத்தர் கோவிலை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கின்றார்.இதன் காரணமாக மனித புதை குழிகள் மூடி மறைக்கப்படும்.எனவே ஐ.நா.கூட்டத்தொடரில் ஆவது எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content