இலங்கை

தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய நபர் : இலங்கையில் பரபரப்பு!

கேகாலை, தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியை காண்பித்து மிரட்டி யுவதியை கடத்திச் சென்றதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் துப்பாக்கிகளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை, தெஹியோவிட்ட மற்றும் கதன்கம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் ஆவர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடத்திச் செல்லப்பட்ட யுவதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருடன் நீண்ட காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட தாயார், யுவதியை சில நாட்களுக்கு உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

பின்னர் இந்த யுவதி கடந்த 12 ஆம் திகதி, தனது தாயாரின் வீட்டிற்கு மீண்டும் சென்றிருந்தபோது,

சந்தேகநபர்கள் இருவரும் யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, கடத்திச் செல்லப்பட்ட யுவதியின் தாயார் இது தொடர்பில் தெரணியகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!