இலங்கை

பல இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது!

பல இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களை பெற்று அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூல் ஊடாக இளம் பெண்களுடன் காதல் உறவை ஏற்படுத்திக்கொண்ட குறித்த நபர் பின்னர் அவர்களை ஹோட்டல் அறைகளுக்கு வரவழைத்து நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார்.

பின்னர் அவற்றை காண்பித்து இளம் பெண்களை மிரட்டி பணம்பறித்து வந்துள்ளார். அவ்வாறாக அவிசாவளையைச் சேர்ந்த பெண்ணுடனும் பழகி இரண்டு இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக குறித்த யுவதி சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவில் அந்த யுவதி முறைப்பாடு செய்துள்ளாா்.

இதனையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்