இலங்கை

சிங்கப்பூரில் விமான நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர்

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்கான அனுமதி அட்டையைப் பெற்றுவிட்டு விமானம் ஏறாதவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

55 வயதான குறித்த நபருக்கு வெளிநாடு செல்லத் திட்டமில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவர் காதலியை வழியனுப்புவதற்காக அனுமதி அட்டையைக் கொண்டு இடைவழிப் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது. உள்ளமைப்புப் பாதுகாப்புச் சட்டத்திற்கமைய, விமானத்தை ஏறுவதற்கான அனுமதி அட்டையைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைவது குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் இடைவழிப் பகுதி பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். விமானத்தை ஏறுவதற்கான அனுமதி அட்டையைத் தவறாகப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரின் இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் 16 பேர் கைதானதாகக் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!