ஐரோப்பா

துருக்கியில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி கைது!

புத்தாண்டு கொண்டாட்டங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த பிரதான சூத்திரதாரியை துருக்கி காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

தென்கிழக்கு நகரமான மாலத்யாவில் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய கூட்டு நடவடிக்கையில் இப்ராஹிம் புர்டகுசின் (Ibrahim Burtakucin) என்ற நபர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் துருக்கி மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், மோதல் மண்டலங்களில் நடந்து வரும் சண்டையில் சேர வாய்ப்பு தேடி வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஐ.எஸ் அமைக்கு சொந்தமான டிஜிட்டல் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வெளியீடுகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

முன்னதாக பண்டிக்காலங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்ட ஏறக்குறைய நூறு பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!