இலங்கை செய்தி

உதய கம்மன்பில போன்றோர் மீண்டும் எம்பியானால் பெரும் அழிவு ஏற்படும்: – பத்தரமுல்லை சீலரதன தேரர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையுடன நாடகமாகிறார்.

அவரது இந்த நாடகம் வெற்றியடைகிறதா தோல்வியடைகிறதா? என்பதனை எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ள முடியும் என ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில ஈஸ்டர் விசாரணைக் குழுவின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய போதே சீலரதன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறானவர்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவானால் பெரும் அழிவு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

“கிளைக்குக் கிளை தாவுபவர்கள் பைத்தியக்காரர்கள். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இப்போது எல்லோரும் அலறுகிறார்கள். இதனால் அந்த மக்கள் நிவாரணம் பெற முடியுமா?

தற்போது கம்மன்பில தன்னிடம் தேவையான ஆவணங்கள் இருப்பதாக கூறுகிறார். ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கும்போது ஏன் இவற்றைக் கூறவில்லை? இந்த ஆவணங்கள் அப்போது கொடுக்கப்படவில்லையா?

இவரின் இந்த நடிப்புக்கு பின்னால் ஓர் இயக்குனர் இருக்கிறார். வழிநடத்தும் குழுவும் இருக்க வேண்டும். நடிப்பு வெற்றியா இல்லையா என்று பார்ப்போம். தவறினால் கல்லெறியப்படுவார் என தேரர் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!