ஐரோப்பா

பிரித்தானியாவில் 14 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த தொழிற்கட்சி : அரசாங்கத்தை கலைக்கும் ரிஷி சுனக்!

பிரித்தானிய தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்தித்தபின்னர், பிரதமர் ரிஷி சுனக் அரசாங்கத்தை இன்று (05.07) அதிகாரப்பூர்வமாக கலைக்கிறார்.

641 தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர் கட்சி 33.9% வாக்குகளுடன் 410 இடங்களை வென்றுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சிக்கு 119 இடங்களும் 23.7% வாக்குகளும் உள்ளன. லிபரல் டெமாக்ராட்ஸ் 71 தொகுதிகளில் 12.3% மொத்த வாக்குகளைப் பெற்றுள்ளது, அதே சமயம் சீர்திருத்த UK 14.3% வாக்குகளைப் பெற்றுள்ளது, நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மிகப் பெரிய தோல்வியை தொடர்ந்து 14 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தொழிற்கட்சியின் கெய்ர் ஸ்டாமர் பிரித்தானியாவின் 10 ஆவது பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் ரிஷி சுனக் தனது இராஜினாமா கடிதத்தை மன்னரிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே ஸ்டாமர் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னரை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிரித்தானிய நேரப்படி மதியம் 12.20 மணியளவில் அவர் நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

(Visited 52 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்