வட அமெரிக்கா

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; முன்னாள் ஜனாதிபதிகளுக்குள் வெடித்த கருத்து வேறுபாடு

அமெரிக்காவில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள சமீபத்திய தீர்ப்பு ஒன்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளிடையே மாறுபட்ட நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கருப்பின மற்றும் லத்தீன் இன மாணவர்களின் கல்லூரி சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் “உறுதியான நடவடிக்கை கொள்கை” என்ற பெயரில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் இனங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் கல்லூரி விண்ணப்ப படிவங்கள் நடைமுறையில் இருந்து வந்தன.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இனி கல்லூரி விண்ணப்ப படிவங்களில் மாணவர்களின் இனங்களை அறிந்து கொள்ளும் முறை நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் ஒபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

US top court bans colleges from considering race in admissions | Courts  News | Al Jazeera

செயல்முறையில் இருந்து வந்த இந்த நடைமுறை மூலம் நானும் என்னுடைய மனைவி மிச்செல் உட்பட பல்வேறு மாணவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க அனுமதித்தது.மேலும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டவர்களுக்கு நாங்களும் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் மற்றும் நாங்களும் அனைத்து தகுதிகளுக்கும் உடையவர்கள் என்பதை நிரூபிக்க உதவியது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தால் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களைப் போன்றவர்களின் முயற்சியை இரட்டிப்பாக்க வைக்க வேண்டிய தருணத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பாக டொனால்ட் டிரம்ப் அவரது சமூக வலைதளமான ட்ரூத்-தில் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும், இது அனைவரும் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு.

இனி அனைவரும் தகுதியின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிற நிலைக்கு நாம் திரும்புகிறோம் என கருத்து பதிவிட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content