உலகின் மிகக் கடினமான programming போட்டியில் தங்கம் வென்ற இந்திய வம்சாவளி இளைஞன்

உலகிலேயே மிகக் கடினமாகக் கருதப்படும் programming எனப்படும் நிரலாக்கப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகஸ்தியா கோயெல் தங்கம் வென்றுள்ளார்.
எகிப்தில் நடந்த அனைத்துலகத் தகவலியல் போட்டியில் மொத்தம் 34 மாணவர்கள் தங்கம் வென்றுள்ளார்.
அவர்களில் அகஸ்தியாவும் ஒருவர். அகஸ்தியா 600க்கு 438.97 மதிப்பெண்களைப் பெற்று போட்டியில் 4ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.
சீனாவைச் சேர்ந்த காங்யாங் சோ (Kangyang Zhou) முழு மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்ததாக Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் அகஸ்தியா இரண்டாவது முறையாக அனைத்துலகத் தகவலியல் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். அவரது சாதனையை இணையவாசிகள் பலர் பாராட்டியுள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)