இந்தியா

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்த கணவன்!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுக்குள் கணவனே சிறைவைத்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள எச்.டி.கோட் தாலுகா எச்.மாடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனலயா. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எச்.டி கோட் கிராமத்தைச் சேர்ந்த சுமா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.அவரை திருமணம் செய்த நாளில் இருந்து சுமாவின் நடத்தை மீது சுனலயா சந்தேகம் கொண்டார். இதன் காரணமாக ஒரு அறையில் சுமாவை வைத்து பூட்டி 3 பூட்டுக்களைப் போட்டார். விளக்குகள் இல்லாத அந்த இருட்டறையில் சுமா தவித்து வந்தார்.

அத்துடன் தன் மனைவி யாரிடமும் பேசக்கூடாது என்பதற்காக வீட்டின் ஜன்னல்களையும் சுனலயா பூட்டி வைத்தார். மேலும் சுமா இருந்த அறையில் கழிப்பறை இல்லை. இதனால் வாளியை வைத்து,அவர் மலம், சிறுநீர் கழிப்பது வழக்கம். அதைக் காலையில் சுனலயா எடுத்து வெளியேற்றியுள்ளார். இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக சுமாவின் நடமாட்டம் இல்லாததால் சுனலயாவிடம் உறவினர்கள் விசாரித்தும் உள்ளனர். ஆனால், அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இருட்டறையில் கடந்த 12 ஆண்டுகளாக சுமா அடைத்து வைக்கப்பட்டதை அறிந்த வழக்கறிஞர் சித்தப்பாஜி சாந்த்வான் கேந்திரா என்பவர் பொலிஸில் புகார் செய்தார்.

இதையடுத்து காவல் துறை அதிகாரி சுபான் தலைமையில் பொலிஸார் சுனலயா வீட்டிற்கு நேற்று இரவு சென்று பூட்டுக்கள் மற்றும் கதவை உடைத்து சுமாவை மீட்டனர்.இச்சம்பவம் குறித்து எச்.டி.கோட் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் சுமாவையும், அவரது குழந்தைகளையும் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய சுனலயாவை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content