இலங்கை

கூட்டுறவு சேவை திட்டத்தில் இருந்து விலகும் அரசாங்கம்!

கூட்டுறவு சேவை திட்டத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சேவை திட்டத்தில் இருந்து எவ்வாறு விலகுவது என்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தலையீட்டினால் கூட்டுறவுச் சேவை பாதிக்கப்படுமாயின், அதன் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

“தங்களுக்கு என்ன வகையான தலையீடு அரசாங்கத்திடம் இருந்து தேவை என்பதையும், அந்தத் தலையீடு எப்படி நடக்க வேண்டும் என்பதையும் கூட்டுறவு நிறுவனம் பரிந்துரைத்தால் மட்டுமே இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“எனவே, பிரதமருடன் இணைந்து இது தொடர்பாக எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்க நினைத்தோம்” என்று அவர் மேலும் கூறினார்.

(Visited 8 times, 1 visits today)
See also  இலங்கை வீடொன்றில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதி - தீவிர விசாரணையில் பொலிஸார்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content