இலங்கை

இலங்கையில் ஐயாயிரம் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் அரசாங்கம்!

இலங்கை தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் ஐயாயிரம் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வட்டியில்லா கடன் அடுத்த வாரம் முதல் மீள வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன் கீழ், 9 இலட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் கிடைக்கும், அதை திருப்பி செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது.

ஒரு நாட்டில் கல்வியே சிறந்த முதலீடாக இருப்பதால், இக்கட்டான காலத்திலும் அரசாங்கம் கல்விக்கு முன்னுரிமை வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!