மின்சார சபையை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இன்று முதல் அமுல்
இலங்கை மின்சார சபையை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இன்று(09) முதல் அமுலுக்கு வருகின்றது.
2024 ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் குறிப்பிட்ட ஏற்பாடுகள் தவிர்ந்த ஏனைய ஏற்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபையின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை பொறுப்பளித்து 06 நிறுவனங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை குறிப்பிட்டு அண்மையில் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது.
வர்த்தமானிக்கமைய மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயற்பாடுகள் ஆகிய நடவடிக்கைகளை 06 நிறுவனங்களுக்கு பொறுப்பளிப்பதற்கான ஏற்பாடுகள் வௌியிடப்பட்டுள்ளன.
இதனூடாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக மறுசீரமைப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றது.
கலைக்கப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு பதிலாக புதிதாக நிறுவப்படவுள்ள 06 நிறுவனங்களில் 03 நிறுவனங்களுக்கான பொது முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் தற்போது அமுலில் உள்ளதாக இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான செயலணியின் பிரதானி புபுது நிரோஷன் கூறியுள்ளார்.




