இலங்கை

இலங்கையில் மகன் கடத்தலைத் தடுக்க முயன்ற தந்தை பலி! அமில வீச்சு தாக்குதலுக்கு இலக்கான மகன்!

எஹலியகொட பிரதேசத்தில் ஆயுதமேந்திய கும்பலினால் தனது மகனைக் கடத்திச் சென்றதைத் தடுக்க முற்பட்ட 65 வயதுடைய நபரொருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை.

கடந்த 19ஆம் திகதி மாலை ஜீப் வண்டியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவித்துக் கொண்டு குழுவொன்று பரகடுவ எஹெலியகொடவில் அமைந்துள்ள வீடொன்றுக்கு வந்துள்ளனர்.

வீட்டில் இருந்த இளைஞன் ஒருவர் மீது அமில வீச்சு தாக்குதலை மேற்கொண்டு, கைவிலங்கிட்டு பலவந்தமாக அழைத்துச் செல்ல அந்த கும்பல் முற்பட்ட போது, ​​அவரது தந்தை அதனை தடுக்க முயன்றுள்ளார்.

இதன்போது, தந்தை ஜீப்பில் தொங்க முற்பட்ட நிலையில், ஜீப்பினை நிறுத்தாமல் செலுத்தியதால் அவர் அதிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த தந்தை மீது ஜீப் வண்டியின் சில்லுகள் ஏறியதில் அவர் படுகாயமடைந்திருந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த 65 வயதுடைய தந்தை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த குழுவினரால் மகனும் அமில வீச்சுக்கு இலக்காகி இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தந்தையின் சடலத்தை பார்ப்பதற்காக மகன் இன்று (22) வீட்டிற்கு வந்துள்ளார்.

See also  இலங்கை - எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான இறுதி அறிவிப்பு!

கடத்தப்பட்ட மகன் காயங்களுடன் வீதியில் விட்டுக் செல்லப்பட்டுள்ளதோடு, உறவினர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

குடும்பத்துக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே நிலவும் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content