இலங்கை

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பெண்ணை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் கைப்பையை பறித்து சென்றதாக கூறப்படும் நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்துள்ள நெதர்லாந்து பெண் வீதியில் நடந்து சென்ற போது, காட்டு பகுதியில் மறைந்திருந்த இரண்டு பேர் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் அவரிடம் இருந்த கைப்பையை பறித்து சென்றுள்ளனர்.

அதில் ஆயிரம் யூரோ நாணயம், சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான செல்போன், 6 ஆயிரம் ரூபா பணம், அழகு சாதனப் பொருட்கள் இருந்ததாக நெதர்லாந்து பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பரகொட பிரதேசத்தை சேர்ந்த கூலி தொழில் செய்யும் 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெலிகம பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content