இலங்கை செய்தி

வீட்டில் பொய் சொல்லிவிட்டுச் சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி

கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஹிக்கடுவ ஆற்றில் ஆற்றுக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சஸ்மிகா சுதம் என்ற 16 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) மாலை கோவிலுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது நண்பர்களுடன் வீட்டில் இருந்து புறப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ ஆற்றுக்கு குளிப்பதற்கு 9 பேர் சென்றுள்ளதுடன், மாலை 5.30 மணியளவில் 5 பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.

அவர்களில் 4 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டனர்.

சஸ்மிகா நீரில் மூழ்கி காணாமல் போனதையடுத்து, நேற்று இரவு வரை பொலிஸ் உயிர்காக்கும் படையினரும் பிரதேசவாசிகளும் தேடினர்.

ஹிக்கடுவ புகையிரத பாலத்திற்கு அருகில் உள்ள ஹிக்கடுவ ஆற்றில் இன்று (21) காலை மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!