ஐரோப்பா

நடுவானில் விமானத்திற்கு நேர்ந்த கதி : திடீரென நிரம்பிய நச்சு புகையால் பதற்றம்!

பயணிகள் நிரம்பியிருந்த ஒரு விமானம், திடீரென நச்சுப் புகையால் நிரம்பியதை தொடர்ந்து பலரும் நோய் வாய் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இந்த பிரச்சினையை எதிர்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக குறித்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியது. அத்துடன் விமானம் தரையிறங்கியதுடன் துணை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் உடனடியாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!